• May 25, 2025

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

 பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

டெல்லியில் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.  இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார். இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்

கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாசல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *