கோவில்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய : 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலை, பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீசார் அருணாசலம் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் தலா 60 கிலோ எடை கொண்ட 22 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரில் இருந்தது பாண்டவர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூல்சாமி மகன் பாண்டித்துரை (33), ராஜீவ் நகரை சேர்ந்த பழனி மகன் முத்துப்பாண்டி (20) என்பதும், அவர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சட்ட விரோதமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 1,320 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் காருடன் ரேஷன் அரிசியை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்..
மேலும் பாண்டித்துரை, முத்துப்பாண்டி ஆகியோரை கைது மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
