செங்கோட்டையன் ஏன் தவிர்க்கிறார்.? – எடப்பாடி பழனிசாமி பதில்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் நடந்த பாராட்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, மூத்த தலைவர் செங்கோட்டையன் எம்.எல்/ஏ. புறக்கணித்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும், அவர் தவிர்த்தார்.<
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்தார். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். 2வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றது பேசுபொருளாகி உள்ளது.
>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஏன் தவிர்த்தார் என்று அவரை போய் கேளுங்கள்’ … அவர கேட்டாதானே காரணம் தெரியும். இங்க இன்னும் நிறைய பேர் வரல… அதலாம் கேக்குறீங்களா? நான் என்னைக்குமே யாரையுமே எதிர்பார்ப்பதில்ல.” என்றார்.
“ செங்கோட்டையன் ஏன் உங்களை தவிர்க்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு “தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்சினை குறித்த கேள்வியை இங்கு கேட்க வேண்டாம். நாங்க சுதந்திரமா செயல்படுகிற கட்சி. இங்கே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
