தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: கோவில்பட்டியில் இரவு முழுவதும் தூறல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதற்கிடையே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 2 நாட்களில் மேலும் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் மொத்தம் 227.20 மிமீ மழை பெய்துள்ளது. சராசரி மழையளவு 11.96 மி/மீ. ஆகும்.
முக்கிய ஊர்களில் மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம் வருமாறு:-
தூத்துக்குடி 21.00
ஸ்ரீவைகுண்டம் 8.40
திருச்செந்தூர் 8
காயல்பட்டினம் 6
குலசேகரப்பட்டினம் 8.
சாத்தான்குளம் 6.20
கோவில்பட்டி 12
கழுகுமலை 13.
கயத்தாறு 5.
கடம்பூர் 24.
எட்டயபுரம் 9.
விளாத்திகுளம் 10.
காடல்குடி 21.
வைப்பார் 25.
சூரங்குடி 34.
ஓட்டப்பிடாரம் 10
மணியாச்சி 2.20
வேடநத்தம் 1.
கீழஅரசடி 2.20
கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தூறல் விழுந்தபடி இருந்தது., இடையிடையே லேசான மழை பெய்தது. நேற்று காலை வரை இது நீடித்தது,. அதன்பிறகு வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது,
