• June 7, 2025

திருச்சி-பாங்காக் நேரடி விமான சேவை தொடக்கம்

 திருச்சி-பாங்காக் நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று  முதல் திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை தொடங்கியது. இந்த விமானம் நேரடியாக திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு இயக்கப்படுகிறது.

இதன் முதல் சேவை நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் தொடங்கியது. இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பாங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது. இந்த விமான சேவை துவக்க நாளானன்று  திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

இந்த விமானமானது மேற்கண்ட 3 நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  இரவு பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *