• May 16, 2024

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்; 30 -ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ந்  தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் ஆர்.தனசேகர் டேவிட் மற்றும் மார்க்கஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 

துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் சாந்தா போர்ஜியா, முத்துலட்சுமி, சண்முக சுந்தரராஜ், தெய்வீக தொல்காப்பியன் ஆகிய 4 பேரும் போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு செல்வின், சுரேஷ்குமார், வெற்றிவேல் ஆகிய 3 பேரும் இணை செயலாளர் பதவிக்கு ஆரோக்கிய மேரி, ஜஸ்டின், சண்முகராஜா ஆகிய 3பேரும், பொருளாளர் பதவிக்கு கணேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகிய 3பேரும் போட்டியிடுகின்றனர்

செயற்குழு உறுப்பினர் (பொது) பதவிக்கு 9 பேரும் செயற்குழு உறுப்பினர் (பெண்கள்) பதவிக்கு 5பேரும் போட்டியிடுகின்றனர். வருகிற 30-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அன்று இரவே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர்கள் பிள்ளை விநாயகம்,  சந்தனகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *