தொகுதி பங்கீட்டில் 3 கட்சிகளுடன் இழுபறி: திமுக மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. கூட்ட ணி யில் கடந்த தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி பிரிந்து பா..ஜனதா கூட்டணியில் சேர்ந்து விட்டது. இதற்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த கட்சிகளுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ,மதிமுக கட்சிகளுடன் பேச்சில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. அவர்கள் அதிக தொகுதிகள் கேட்கிறார்கள்.
கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் , மதிமுக கட்சிகள் இந்த தடவை தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவும் பேச்சுவார்த்தையில் குளறுபடி நீடிக்கிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டு அதன்படி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சு நடத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நாளை சந்தித்து பேச இருக்கிறார்கள்.
