அரசு பஸ்களில் 200 கி.மீ. தூரம் பயணம் செய்வோருக்கும் முன்பதிவு வசதி

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தினசரி பயணம் மேற்கொள்ளும் சுமார் 60 ஆயிரம் பயணிகளில், 20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இருக்கை முன்பதிவு வசதியினை அரசு பஸ்களில் 200 கி.மீ. மற்றும் அதற்கு மேற்பட்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு விரிவுப்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி மதுரையிலிருந்து, கொடைக்கானல், கொல்லம், மூணாறு, நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை
*கோயம்புத்தூரிலிருந்து திருவண்ணாமலை
*சேலத்திலிருந்து, பெங்களூரு காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர்
*ஈரோட்டிலிருந்து, பெங்களூரு, குமுளி, மைசூரு, புதுச்சேரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர்*
*ஓசூரிலிருந்து, சென்னை கடலூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை
*ஊட்டியிலிருந்து, பெங்களூரு, கண்ணனூர், கோழிக்கோடு, மைசூர், பாலக்காடு
*பழனியிலிருந்து, கடலூர், நெய்வேலி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி
*சிவகாசியிலிருந்து, ஈரோடு, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர் மற்றும் திருநெல்வேலியிலிருந்து, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.*
இதன் காரணமாக, தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து, 61,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்களுடன் கூடுதலாக 200 கி.மீ. மற்றும் அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.*
பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.என்று தெரிவிக்கபட்டுள்ளது.
