• June 7, 2025

தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி தொடங்கியது

 தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 வது புத்தககண்காட்சி  இன்று தொடங்கி மே 1 ம் தேதி வரை நடைபெற உள்ளது தூத்துக்குடியில் எட்டயபுரம் சங்கர பேரி பிரதான சாலை அருகே நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பாராளுமன்ற தி.மு.க. குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்..

பின்னர்  அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார் தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிவகளை கொற்கை ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை பார்வையிட்டார் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் இடங்களையும் பார்வையிட்டார்.

கனிமொழி எம்பி செய்தியாளரிடம் பேசிய போது கூறியதாவது:-

10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 110 அரங்குகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது  மேலும் சிவகளை கொற்கை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்தும் தொல்லியல் பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது 

இதுபோல் புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது கடைசி 4 நாட்கள் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில்  நெய்தல் கலை விழா நடைபெற உள்ளது . இந்த புத்தக கண்காட்சியை பொதுமக்கள் வந்து பார்த்து செல்ல வசதியாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், வட்டாட்சியர் செல்வகுமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

புத்தக கண்காட்சி தொடக்க விழாவை தொடர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர் பொதுமக்கள் கூட்டமும் வரத்தொடங்கியது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *