கோவில்பட்டி அண்ணா நகர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி அறிஞர் அண்ணாநகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன்- மாரியம்மன், சக்தி விநாயகர், கருப்பசாமி, வைரவசாமி, முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு மேல் ,மங்கள இசை, பூர்வாங்க பூஜை,கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜை கள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு மேல் இதே போல் வஜமான சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட பூசைகள் நடந்தன.
இன்று (திங்கள்கிழமை கலை 7 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், மூன்றாம்கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு மேல் மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து காலை 9.20 மணிக்கு விமான கோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் , தீப ஆராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பகல் 11 மணிக்கு மேல் அன்னதானம் நடந்தது.,
