• June 7, 2025

பழனி முருகன் கோயிலில் 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி நடிகை சமந்தா வழிபாடு

 பழனி முருகன் கோயிலில் 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி நடிகை சமந்தா வழிபாடு

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர். சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தன்னுடைய உடல்நலம் முன்னேறுவதற்காக படிவழி பாதையில் நடந்து சென்று 600 படிகள் கற்பூரம்  ஏற்றி வழிபாடு செய்தார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *