• June 7, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டுப்போன 95 செல்போன்கள்  மீட்பு; உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்

 தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டுப்போன 95 செல்போன்கள்  மீட்பு; உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் திருட்டு  போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் , தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  சுதாகர்,  அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.

அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 680 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூ.11லட்சத்து 50ஆயிரம் மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  ஒப்படைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

, செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு செல்போனில் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது அவற்றை கட்டுப்பாடுடன் கையாள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு போன் லாக் தேவையில்லை, குழந்தைகளுக்கு பெற்றோருக்கு தெரியாமல் ரகசியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை, அது பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்,

 செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்போது தற்கொலை செய்வது வரை நிகழ்ந்துள்ளது. 

ஆகவே ஆன்லைன் ரம்மி விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTPயை கொடுக்க வேண்டாம், வங்கி ஒருபோதும் உங்கள் OTPயை கேட்காது. உங்களுக்கு வரும் OTPயை யாரிடமும் பகிறாதீர்கள், அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்மந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். 

இவ்வாறு அவர் பேசினார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *