• June 7, 2025

கோவில்பட்டி ஆக்கிபோட்டியில் திட்டங்குளம் அணி `சாம்பியன்’

 கோவில்பட்டி ஆக்கிபோட்டியில் திட்டங்குளம் அணி `சாம்பியன்’

உலகக்கோப்பை ஆக்கிப்போட்டி தொடங்க உள்ளதை யொட்டி கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில், வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விழிப்புணர்வு ஆக்கிப்போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் திட்டங்குளம் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 40 வயதிற்கு மேல் மூத்தோர் ஆக்கிப் போட்டி நடந்தது. இதில் 6 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஆக்கி அணியும், இலுப்பையூரணி ஆக்கி அணியும் மோதின. ஆட்ட நேரத்தில் 2 அணிகளும் தலா 1 கோல் போட்டதால், ஆட்டம் சமனில் முடிந்தது. வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றது.

போட்டியை கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் பரிசுகளை வழங்கினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *