உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்; கனிமொழி தொடக்கி வைத்தார்

தூத்துக்குடி எஸ்.ஆர்.எம். மஹாலில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு கூட்டம நடைபெற்றது. இந்த கூட்டத்தை கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்
விழாவில் அவர் பேசும்போது, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்குப் பங்காற்றிடும் வகையில் சமூகப் பொறுப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், HCL SAMUDAY திட்ட இயக்குநர் ஆலோக் வர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
