• May 20, 2024

Month: January 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பல்லாங்குழி சாலைகள்; சீரமைக்க கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகரில் கன ,மழைக்கு பிறகு அரிப்பு ஏற்பட்டு பல்லாங்குழி சாலைகளாக மாறிவிட்டன. கோவில்பட்டி நகரில் பருவக்குடி, வேம்பார் செல்லும் சாலை (மாதாங்கோவில் ரோடு) குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. மேலும் கோவில்பட்டி நகரில் இந்த சாலை மிக முக்கிய சாலையாக விளங்குகிறது காரணம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள், வர்த்தகம் என மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை விபத்து ஏற்படும் வகையில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை

கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் சு,சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி , சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 5.1.2024 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு இந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொது மக்களின் ஆதார் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ஆதார் பதிவு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அறிவுசார் மையத்தில் இளைஞர்களுக்கு  இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் மற்றும் ஸ்மார்ட்

கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள ராமசாமிதாஸ் பூங்காவில் ரூ.2 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் புதிதாக அறிவுசார் மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று மாலை  திறந்து வைத்தார். இதையொட்டி கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் கருணாநிதி, ஆணையாளர் கமலா, கவுன்சிலர்கள், பொறியாளர்கள் சனல்குமார் , சண்முகநாதன், நகரமைப்பு அதிகாரி சேதுராஜ், சுகாதார அலுவலர் ஆரியங்காவு உள்பட  பலர் கலந்து கொண்டனர். இந்த […]

தூத்துக்குடி

சாலைமறியல்: தூத்துக்குடி – மதுரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்தன. இதனால் மாநகர பகுதியில் வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அதேபோன்று மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியிலும் மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சோட்டையன் தோப்பு, குமரன்நகர், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சில தெருக்களில் 20 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் வடியாமல் தேங்கி […]

தூத்துக்குடி

இன்று மழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர் கோ. லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  (6.1.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.மருதூர் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்ககூடாது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் […]

கோவில்பட்டி

மழையில் சேதம்  அடைந்த நகராட்சி பள்ளியின் கழிவறை; பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

கோவில்பட்டி புதுரோட்டில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. பழம்பெரும் பள்ளியான இங்கு 270 மாணவா், மாணவிகள் படிக்கின்றனா். 10 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கென பள்ளி வளாகத்தில் 5 கழிப்பறைகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையில், கழிப்பறை சுற்று சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதன்பிறகு இன்னும் அதனை சீரமைக்கவில்லை. இதனால் கழிவறை திறந்தவெளியாக உள்ளது. எனவே மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள்.இந்த கழிப்பறையைச் சீரமைத்து தருமாறு, நகராட்சி நிா்வாகம் […]

செய்திகள்

பிறந்தநாள்: முதல் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி

திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று இன்று 5-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி  சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  கனிமொழி பிறந்த நாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

கோவில்பட்டி

பொறியாளர் பணிக்கான போட்டி தேர்வு; கோவில்பட்டியில் 2 நாட்கள் நடக்கிறது

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு 6 .1.2024 மற்றும் 7.1.2024 ஆகிய 2 நாட்கள் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய  இடங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று காலை 9 மணிக்குள் வரும்  தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே குறித்த நேரத்தில் பயண […]

செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த், டிசம்பர் 28 ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் கோயம்புத்தூரில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  உடல் அடக்கம் நடந்த இடத்தில் விஜயகாந்த் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.  நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர், விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்திய பிறகு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேசியப் புத்தக கண்காட்சி தொடக்கம் 

டெல்லி நேஷனல் புக் டிரஸ்ட், திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 38வது தேசிய புத்தக கண்காட்சி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சிதொடக்க விழா இன்று (5-ந்தேதி )இன்று காலை நடைபெற்றது. 21ம் தேதி வரை கண்காட்சி நடக்கும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். சிறுகதைகள்,பொது அறிவு கட்டுரைகள்,நாவல்,வாழ்க்கை வரலாறு,போட்டித் தேர்வு நூல்கள்,தமிழ் ஆய்வு நூல்கள்,ஆன்மீகம் […]