கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(வயது 26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் செல்லத்துரைக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பது வழக்கம். நேற்று இரவு செல்லத்துரை தனது தாயிடம் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அவரது தம்பி முத்துச்செல்வம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.இதில் முத்துச்செல்வம் கடுமையாக தாக்கியதில் அண்ணன் செல்லத்துரை […]
கோவில்பட்டியை சேர்ந்தவர் பழைய பஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் முரளி (வயது 58). இவருடைய ஆஸ்பத்திரியில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களுக்கு முன்பு நர்சு வேலைக்கு சேர்ந்தார்.சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க சென்ற ஒவ்வொரு வார்டாக சென்ற டாக்டர் முரளியுடன் அந்த நர்சும் சென்றார். அப்போது அந்த நர்சுக்கு டாக்டர் முரளி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறதுஇதனால் மனமுடைந்த அந்த நர்சு வீட்டிற்கு சென்றதும் தூக்க மாத்திரை […]
கோவில்பட்டியை அடுத்த அஞ்சுரான்பட்டி ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் .நவநீத கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சின்ன மாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்இம்மானுவேல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் கலால் வரி குறைப்பின் காரணமாக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி இன்று(மே31) ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாக விற்பனையாளர் சங்கத்தினர் கூறி இருந்தனர். மேலும், கடந்த 2017 ல் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் […]
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (29.5.2022) கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக்ராஜ் (33) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் […]
கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வைகையில் பைபாஸ் சாலையில் புதிதாக கூடுதல் பஸ் நிலையம் திறக்கபட்டது, ஆனால் அந்த பஸ் நிலையம் தொடர்ந்து இயங்கவில்லை. தற்போது பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் செல்வதில்லை. பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாமாக மாறிவிட்டது, வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையம் வெளியே நிறுத்தி பயணிகள் ஏற்றியும் இறக்கியும் செல்கிறார்கள். நள்ளிரவு நேரங்களில் சர்வீஸ் சாலையில் உள்ள பஸ் நிலையம் அருகில் வருவது கிடையாது. பாலத்தின் கீழ்புறத்தில் நடுரோட்டில் […]
ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் குறைந்தபட்சம் ஒரு அடி இடம் விடுவது வழக்கம். அது போல் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் இரண்டு வீடுகளுக்கு இடையே சிறிது இடைவெளி காணப்பட்டது.அந்த இடைவெளிக்குள் நேற்று ஒரு பசு மாடு சென்றுவிட்டது. பின்னர் அந்த மாட்டினால் வெளியே வரமுடியவில்லை. சுவர் இடுக்கில் சிக்கிக்கொண்ட அந்த பசுமாடு அலறியது. இந்த சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர், இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் வேண்டி நடந்த இந்த வழிபாட்டில் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.சக்தி கொடியை மாவட்ட துணைத்தலைவர் பண்டார முருகன் ஏற்றிவைத்தார். ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் கருவறையில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் விளக்கேற்றினார். கலச […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த 17-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 29 மாநில அணிகள் பங்கேற்றன. பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடந்த இப்போட்டியில் மொத்தம் 50 போட்டிகள் நடைபெற்றன.8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட லீக் போட்டிகளும், பின்னர் காலிறுதி, அரையிறுதி போட்டிகளும் நடைபெற்றன. இறுதிபோட்டிக்கு உத்தரபிரதேசம்-சண்டிகர் அணிகள் தகுதி பெற்றன.இதை தொடர்ந்து 3, 4 இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை நேற்று […]
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தேசிய கேலோ இந்தியா ஆக்கி போட்டி. ஜூன் 4-ந் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்ச குலா என்ற இடத்தில் நடைபெற உள்ளது.இதில் தமிழ் நாடு அணியின் சார்பாக விளையாட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீராங்கனை. அ. அன்னபாக்கியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022