திருப்பூரில் இன்று மாலை சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. 4.30 மணி அளவில் திருப்பூர் அருகே கோவில்பாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதியதில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று விவரம் தெரிவித்தனர். இதற்கு இடையே […]
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்..பி., முயற்சியின் பேரில் அண்ணா பிறந்தநாளில்(செப்டம்பர் 15) கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள் தொடங்கப்பட்டது. போட்டிகள் இணைய வழியில் தொடங்கப்பட்டு இன்று வரை 50 ஆயிரத்துக்கும் திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,24,097க்கும் மேற்பட்ட முயற்சிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 3,32,365 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். தி.மு.க. மகளிர் அணி சார்பில் திமுக துணைப் பொதுச் […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023 – ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த எம். எஸ். சுவாமிநாதன் விவசாய விஞ்ஞானி ஆவார். கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன், 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்தார். அவருடைய முழு பெயரான மான் கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்பதை சுருக்கி எம் எஸ் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11. 20 மணி […]
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிட்ட நிலையில் புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பட்டியலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. இடம்பெற்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி […]
பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க. நேற்று முன்தினம் முறித்துக்கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதாவது, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள், ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா உடனான மோதல் […]
சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும். காவிரி […]
பா. ஜனதாவுடன் அ. தி. மு. க. கூட்டணி முறிந்தது. இது தொடர்பாக அ. தி. மு. க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு :-
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட […]
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :- அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( 25) எம்ஜிஆர் மாளிகையில், கழக […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022