டெல்லி நேஷனல் புக் டிரஸ்ட், திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 38வது தேசிய புத்தக கண்காட்சி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சிதொடக்க விழா இன்று (5-ந்தேதி )இன்று காலை நடைபெற்றது. 21ம் தேதி வரை கண்காட்சி நடக்கும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். சிறுகதைகள்,பொது அறிவு கட்டுரைகள்,நாவல்,வாழ்க்கை வரலாறு,போட்டித் தேர்வு நூல்கள்,தமிழ் ஆய்வு நூல்கள்,ஆன்மீகம் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பஸ்நிலையம் எதிரே தேவர் சிலை அருகில் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிநடைபெற்றது. விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநிலமகளிரணி துணைசெயலாளர் சுபப்பிரியா தலைமையில் அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ்,நகரசபை சேர்மன் கருணாநிதி,ஒன்றியசேர்மன் கஸ்தூரிசுப்புராஜ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் அனைத்துவியாபார பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை […]
பிரதமர் மோடியை டெல்லியில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.கேலோ இந்தியா நபோட்டி வருகிற 19-ம் தேதி சென்னையில் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். மேலும் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண கூடுதல் நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். About […]
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் ஆன்சைட் அருங்காட்சியகம் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. வெள்ள நீர் அகற்றப்பட்டு,சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இன்று (4/1/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கீழஈரால் அஞ்சலகம் மூலம் ரூ.396/- செலுத்தி குழு விபத்து காவலர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த ஜெயகுமார் தங்கவேல்சாமி என்பவர் கடந்த 7.7.2023 அன்று செங்கல்பட்டில் வைத்து நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அவரால் நியமிக்கப்பட்ட நியமனதாரரான ரோஜா ராணிக்கு இன்று(3.1.2024-) கோவில்பட்டி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட தபால் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி அருகே மேலமருதூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அதில் குளித்து வருகின்றனர். நேற்று மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்றனர். இதில் மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு மஞ்சள் பால் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, […]