• May 20, 2024

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி 

 கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி 

தூத்துக்குடி அருகே மேலமருதூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த  ஏராளமானோர் அதில் குளித்து வருகின்றனர்.  

 நேற்று  மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்றனர். இதில் மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி ஆகியோர் அவரை மீட்க போராடினர். ஆனால் மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி ஆகியோர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கனிச்செல்வியை அருகே இருந்த கிராம மக்கள் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *