அஞ்சல் காப்பீட்டு திட்டம்: விபத்தில் மரணம் அடைந்தவருக்கு ரூ.10 லட்சம்
கீழஈரால் அஞ்சலகம் மூலம் ரூ.396/- செலுத்தி குழு விபத்து காவலர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த ஜெயகுமார் தங்கவேல்சாமி என்பவர் கடந்த 7.7.2023 அன்று செங்கல்பட்டில் வைத்து நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அவரால் நியமிக்கப்பட்ட நியமனதாரரான ரோஜா ராணிக்கு இன்று(3.1.2024-) கோவில்பட்டி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோட்ட தபால் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்