பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்”- அ.தி.மு.க. வாக்குச்சாவடி
சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே நாடும் நமதே என்ற அடிப்படையிலே கழக செயல்வீரர்கள்,வீராங்கனைகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய […]