• May 9, 2024

Month: December 2023

கோவில்பட்டி

விவசாயம் பாதிப்பால் ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதிக்கு தேசிய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு தலைவர் வக்கீல் எஸ். ரெங்கநாயகலுஅனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு போன்ற பகுதிகளில் வானம் பார்த்த கரிசல் பூமியாக உள்ளதால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த நிலையில் இந்த ஆண்டு 2023-2024 ம் ஆண்டு புரட்டாசி பட்டத்தில் பெய்ய வேண்டிய மழை முற்றிலும் பெய்யாமல் விட்டு விட்டதால் புரட்டாசி பட்டத்தில் […]

கோவில்பட்டி

ஜவுளிக்கடைக்குள் புகுந்து பெண் உரிமையாளரிடம் நகை பறிக்க முயன்றவருக்கு தர்மஅடி

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி அம்பிகா (வயது 37). இவர், பசுவந்தனை ரோட்டில்  ஜவுளி மற்றும் செருப்பு கடை நடத்தி வருகிறார். . நேற்று ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பது போல் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென்று அம்பிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர், நகையை பறிக்க விடாமல் தடுத்து ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் […]

செய்திகள்

தென்காசியில் 9 -ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 9-ந்தேதி  (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தென்காசி மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன, இந்த முகாம் 9-ந்தேதி  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. முகாமின் சிறப்பு அம்சங்கள் *100க்கும் […]

கோவில்பட்டி

பரிகாரபூஜை செய்வதாக கூறி 6½ பவுன் நகை அபேஸ்: கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு 3

கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 42)) . இவர் நாரைக்கிணறு போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதூர் பகுதியை சேர்ந்த  உறவினர் தமிழ்செல்வன் என்பவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி வீட்டில்  பரிகார பூஜை நடத்தினார். அப்போது உலகாண்ட ஈஸ்வரியின் 6½ பவுன் தங்க நகைகளை துணியால் மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் வைக்க சொல்லி அவருக்கு தெரியாமல் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு,  அதே பாத்திரத்தில் ஒரு கல்லை வைத்து விட்டு பரிகார நாட்கள் முடியும் வரை பாத்திரத்தை திறக்க […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் துணிகரம்: பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் நகை கொள்ளை

கோவில்பட்டி கணேஷ்நகரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 62). மதுரையில் ஓட்டல் வைத்திருந்தார். இவரது மனைவி அருள்மணி. இவர்களது மகன் கார்த்திக் (40). இவர்  தேனியில் மனைவி மற்றும் மகனுடன் தங்கி  தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டி கணேஷ்நகரில் உள்ள வீட்டில் சந்திரமோகன், அவரது மனைவி அருள்மணி மட்டும் குடியிருந்து வருகின்றனர். கடந்த 27ம்தேதி மகனை பார்ப்பதற்காக சந்திரமோகனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர். வீட்டு வளாகத்தில் உள்ள செடிகளுக்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழிகாட்டுதலின் படி, தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் எஸ்.பொற்செல்வன், கோவில்பட்டி சுகாதாரப்பணிகள்  துணை இயக்குநர் டாக்டர் .குணசேகரன் ஆகியோர் மேற்பார்வையில், மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம் ,; திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி: பட்டப்பகலில் பால் வியாபாரி வெட்டிக் கொலை

தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேலதெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (வயது 30), பால்  வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் பால் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் வந்தபோது 5 பேர் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.  இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நந்தகுமார், தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு வெட்டுக்காயங்களுடன் ஓட்டம்பிடித்தார்.. ஆனாலும் […]

கோவில்பட்டி

கரிசல்குளம் கிராமத்தில் கலையரங்கம் கட்டும் பணி;  கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கரிசல்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான புதிய கலையரங்கம் கட்டப்படுகிறது. இதற்கான  கட்டிட பணியை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பகுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில், பஞ்சாயத்து தலைவர் சிவ ஜோதி, பஞ்சாயத்து துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் […]