• May 20, 2024

Month: July 2023

கோவில்பட்டி

ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 77 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

கோவில்பட்டி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழச்சி  தாளாளர் அருட்தந்தை சார்லஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஜான் வரவேற்று பேசினார் .கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி பங்கேற்று 34 மாணவிகளுக்கும் , 44 மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  நகர்மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கார்கில் வெற்றி தினம்; இந்திய வரைபடத்தில் அகல்விளக்குகள் ஏற்றி மாணவிகள் மரியாதை  

1999ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் போரில் 527 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.1363 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வரை நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது. உயிர் தியாகம் செய்த 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கார்கில் வெற்றி […]

தூத்துக்குடி

பனிமய மாதா பேராலய திருவிழா: தூத்துக்குடியில் 5-ந்தேதி வரை பஸ்கள் வழித்தடம் மாற்றம்;

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா இன்று 26.7.2023 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5.8.2023 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள்  இயக்கப்படுகிறது.. 25.7.2023 முதல் 2.8.2023 வரை பஸ்கள்  வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி  பழைய பேருந்து நிலையத்திலிருந்து திரேஸ்புரம் செல்லும் […]

கோவில்பட்டி

மகளிர் உரிமை தொகை: ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல்

,கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கலைஞர் மகளிர்  உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலய திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடியில் புகழ் பெற்ற புனித பனிமய மாதா பேராலயத்தின் 441 வது ஆண்டு திருவிழா இன்று புதன்கிழமை காலையில் தொடங்கியது. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர், ஆலயத்தை சுற்றி கொடி பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, கொடியை ஆசீர்வதித்து புனிதப்படுத்தி ஏற்றினார். அப்போது, பனிமய அன்னையை வேண்டி பக்தர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.  திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை […]

கோவில்பட்டி

டாக்டர் ராமதாஸ் 85-வது பிறந்தநாள்; கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்  ராமதாஸ்  இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாநாளை பசுமை தாயக நாளாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கொண்டாடினர்.. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ம.க.வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், செண்பகவல்லி அம்மன்  உடனுறை பூவனநாதசாமி கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் […]

தூத்துக்குடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல் பணி; ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது கடந்த 4 ம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முதல் நிலை சரிப்பார்ப்பு பணி வருகிற 28 ம் தேதியுடன் முடிவடையும். அதைத் தொடர்ந்து, 29 […]

கோவில்பட்டி

லிங்கம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை, லிங்கம்பட்டி ஆர்.சி. நடுநிலைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை பீட்டர் அடிகளார் மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் லிங்கம்பட்டி ஆர்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பொதுநல மருத்துவமனை தங்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பொன்செல்வன், நாடார் உறவின்முறை சங்க செயலாளர் மாசில்லாமணி, பொருளாளர் ஜோசப், பொதுநல மருத்துவமனை பொருளாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு இரவு நேரத்தில் வெளியூர் பஸ்கள் வந்து செல்லாவிட்டால்

கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.ராஜகோபால், இன்று காலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். காதில் பூ சுற்றிக்கொண்டு அவரும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பேப்பரை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். பின்னர் கோட்டாட்சியர் ஜெயாவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்காக கூடுதல் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற  கருத்து எழுந்த போது ஊரின் பல்வேறு பகுதிகளில் […]

ஆன்மிகம்

விடலை தேங்காய் உடையும் சகுனம்….

கோவில்களில் விடலை தேங்காய் உடைப்பது வழக்கம். அந்த தேங்காய் உடையும் போது ஏற்படும் சகுனம் பற்றி இங்கு பார்க்கலாம்… * தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும் * ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும் * சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும் * மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் ரத்தினம் சேரும் * ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும் * உடைக்கும் போது கைப்பிடியிலிருந்து தவறி […]