தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆர்த்தி ஸ்கேன் மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவில்பட்டியில் ஸ்கேன் மையம் தவிர மருத்துவமனையும் இயங்கி வருகிறது.ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த 7-ந்தேதி காலை இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 25 […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதுஎனவே, கோவில்பட்டி சிட்கோ உப மின் நிலையத்தின், ஸ்டாலின் காலனி, எட்டையபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு முத்து மாரியம்மன் கோவில் வரை, மந்தித்தோப்பு ரோடு (பாம்பே ஸ்வீட்ஸ் வரை), வக்கீல் தெரு ஆகிய பகுதிகளுக்கும்,சன்னது […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (7.6.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இனாம்மணியாச்சி கல்லறைத் தோட்டம் அருகே இனாம்மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சுந்தரபாண்டியன் (வயது 33) என்பவர் பிடிபட்டார்.அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே சுந்தரபாண்டியனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 480 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மந்திதோப்பு பகுதியில் ஒருவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கில் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (வயது 25) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.பின்னர் முத்துக்காளை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாதவராஜா மற்றும் போலீசார் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி செக்கடி தெருவில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த சின்னத்தம்பி (34), கே.கே […]
கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் 4வது தெருவில் ( குறிஞ்சி நகர்) அருள்பாலிக்கும் முப்பிடாதி அம்மன், கருப்பசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு விநாயகர், முப்பிடாதி அம்மன், கருப்பசாமிக்கு மஞ்சள், பால், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.தொடர்ந்து நாட்காலுக்கு சிறப்பு பூஜை செய்து நடப்பட்டது. பூஜைகளை வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவன கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த் சோதனை நடந்து வருகிறது, 25 கிளைகளுக்கும் தனித்தனி குழுவினர் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.கோவில்பட்டியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவன உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 6௦). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமாகோமதி(52). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு டயாலிசிஸ் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் பெட்ரிக்ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ‘அப்போது கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒரு ஸ்டோரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சம்பந்தமாக சோதனை செய்த போது அந்த கடைமுன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை […]
தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தென்பாகம் ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) தூத்துக்குடி மேல […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022