தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியேறினார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்துள்ளார்.நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு அதிகம். அவற்றில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண், பெண் பக்தர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சேவைகளை மக்கள் மத்தியில் விளக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ் வரவேற்று பேசினார்,. மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொது செயலாளர் சரவணக்குமார்,மற்றும் கிஷோர்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி முன்னாள் […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக சில பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன, மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராஜி (எ) தோட்டா ராஜ் (27) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை தீர்த்து வைக்கும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் சுசிலா தலைமை தாங்கினார்.தாலுகா வினியோக அதிகாரி நாகராஜன் பொதுமக்களிடம் குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் மாற்றம், புதிதாக உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கல், நகல் அட்டை பெறுதல், குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளவர்களுக்கு முகாமிலேயே […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி, விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்தது கனடுபிடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து 4 கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், உத்தரவிட்டார்.அதே போன்று முதல் முறையாக புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் […]
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.கோவில்பட்டி கால்பந்து கழகம், சண்முகையா பாண்டியனார் பேரவை இணைந்து நடத்திய இந்த போட்டியில் வட்டார அளவில் 8 அணிகள் பங்கு பெற்றனஇறுதி போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், காமநாயக்கன் பட்டி அணியும் மோதின இதில் வ.உ.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. காமநாயக்கன்பட்டி அணி 2-வது இடம் பெற்றது.3-வது, […]
கோவில்பட்டி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.ராமசாமி தாஸ் பூங்கா சுத்தம் செய்தல் , அண்ணா பேருந்து நிலையம் சமுதாய கழிப்பறை சுத்தம் செய்தல், அண்ணா பேருந்து நிலைய வளாக சுவரொட்டிகளை அகற்றுதல், சுடுகாடு சுத்தம் செய்தல், கட்டிட கழிவுகளை அகற்றுதல், நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு பகுதியான ஊரணி தெருவில் செயல்பட்டு வந்த நகர் நலமைய கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் அதை இடித்து விட்டு ரூ 75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நகராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ். நகராட்சி ஆணையர் ராஜாராம், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி, […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022