• April 29, 2024

கோவில்பட்டியில் தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்

 கோவில்பட்டியில் தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில்  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்  உடனுறை பூவனநாதசுவாமி கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்மன்  அரசாட்சி செய்வது போலவே, இங்கும்
அம்மனின்  அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது.

பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும்  நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி திருவிழாவும் ஒன்று. 11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5 -ந் தேதி  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி
உலாக்கள் நடந்து வருகிறது. சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடக்கின்றன
,

திருவிழாவின் 9-ம் திருநாளான இன்று (13-ம் தேதி) காலை 9 மணிக்கு  முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.இதையொட்டி
காலையில் இருந்து பொதுமக்கள் குவியத்தொடங்கினார்கள்/ கோவில்பட்டி  மட்டுமின்றி சுற்றுப்ப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு படை எடுத்து வந்தனர்
,

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்மன் தனித்தனி தேரில் காட்சி அளித்தனர். பக்தர்கள் பக்தி கோஷம்
எழுப்பினார்கள். இந்த முழக்கத்துக்கு இடையே அம்மன் தேர் கிளம்பியது.  முக்கிய பிரமுகர்கள வடம் பிடித்துஇழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்
,

கோவில் முன்பிருந்து எட்டயபுரம் சாலை வந்த தேர், வடக்கு ரதவீதி வழியாக படிக்கட்டு துறை அருகே நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் முன்பிருந்து சுவாமி தேர் புறப்பாடு தொடங்கியது. இந்த தேர் அதே வழியாக சென்று படிக்கட்டு துறை அருகே நிறுத்தப்பட்டது. அங்கு சுவாமி-அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு கோவில் நிலையை  அடைந்தன,
தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.

10-ம் திருநாளான  நாளை 14-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, தீபாராதனையும் நடக்கிறது. 11-ம் திருநாளான 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவவிழா நடைபெறும்.

 

 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *