• April 30, 2024

மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் ; 2 போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு

 மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் ; 2 போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு

தமிழநாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.. முதல் நாள் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார்.  தியாகராயநகர் பனகல் பூங்கா அருகில் இருந்து தேனாம்பேட்டை சந்திப்பு வரை திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். அந்த வாகனத்தில் சென்னை தொகுதிகளின் வேட்பாளர்கள மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இருந்தனர்,

ரோடு ஷோ தொடக்கம் முதல் இறுதி வரை  சாலைகளின் இருபுறமும் மக்கள் கூடி இருந்து வரவேற்பு கொடுத்தனர்,

இந்த ரோடு ஷோவுக்கு போலீசார் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அனுமதி வழங்கி இருந்தனர். கட்-அவுட்கள், விளம்பர பலகைகள், பதாகைகள் வைக்ககூடாது என்று போலீசார் கட்டுபாடுகள் விதித்து இருந்தனர்.

ஆனாலும் சில இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்ட்ப்டு இருந்தனர். அவற்றை போலீசார் அகற்றினார்கள். இந்த விதிமீறல்கள் குறித்து பாண்டிபஜார் மற்றும் மாம்பலம் காவல் நிலையங்களில் தேர்தல் அதிகாரி பூபதி புகார் அளித்து உள்ளார்.

இந்த புகாரின்பேரில் 2 காவல் நிலையங்ககளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விளம்பர பலகைகள் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *