கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

 கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

கோவில்பட்டி கதிரேசன் கோவில்  ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விலா  15 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் 23 ம் தேதி நவராத்திரி நிறைவு பெறுகிறது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் காலை வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன் சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது.. கொலு மண்டபத்தில் முதல் 3 நாட்கள் துர்கா பூஜை அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி பூஜை நடைபெற்றது.. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகாலட்சுமி பூஜையில் சிறப்பு அர்ச்சனையும் தீபாராதனை நடைப்பெற்றது. சிறப்பு  பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு  பிரசாதம் சுண்டல்  வழங்கப்பட்டது.

இன்று முதல்  கடைசி 3 நாட்கள் சரஸ்வதிபூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *