வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் தங்க நகைகள் கொள்ளை
விளாத்திகுளம் அருகே உள்ள சில்லிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி இவரது மனைவி ராதா (39). இவர்கள் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தனர். பின்னர் நேற்று ஊர் திரும்பினர்.
அப்போது அவர்களது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 78 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சங்கலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் ராதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா மற்றும் போலீசார் சம்பவத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள், கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.