முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.