ரெயில் பயணியிடம் ரூ.94 லட்சம் பறிமுதல்
சென்னை எழும்பூர் ரெரயில் நிலையத்தில் ரெயிவே பாதுகாப்பு படை . போலீசார் சோதனை மேற்கொண்டனர், முதல் பிளாட்பாரத்தில் இருந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதற்கு சமயத்தில் ஒரு நபர் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் ரெயிவே பாதுகாப்பு படை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிலேஷ் (வயது 41)என்பதும் ரெரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இல்லாத முன்பதிவு டிக்கெட் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
அவர் வைத்திருந்த தோள் பையில் 5௦௦ மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.94 லட்சத்து 23 ஆயிரத்து 500 இருந்தது.
இந்த பணத்தை கொண்டு செல்வதற்கான நோக்கத்தை நிரூபிக்க எந்த காரணத்தையும், சரியான ஆவணங்களையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து அந்த நபரை பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.