மந்திதோப்பு பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மந்திந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோவில்பட்டி சாஸ்திரிநகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துகாளை (வயது 24) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது
உடனே முத்துகாளையை போலீசார் கைது செய்தனர். கைதான முத்துகாளை மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது, மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது,