• May 5, 2024

கோவில்பட்டியில் சித்திரை திருவிழா: அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா

 கோவில்பட்டியில் சித்திரை திருவிழா: அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாள் மண்டகப்படி, நாடார் வர்த்தக குமாஸ்தாக்கள் சாரபில் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் அருட் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். வலி நெடுக பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இரவு 7.25மணிக்கு கோவில் எதிர்புறம் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. ‘சக்தியின் பெருமை’ என்ற தலைப்பில் டாக்டர் இராம. பூதத்தான் பேசினார். இரவு 8 மணிக்கு மெயின்ரோடு அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே சினிமா பின்னணி பாடகி விஜிதா சுரேஷ்சாம் குழுவினரின் ‘யுவர் சாய்ஸ்’ இன்னிசை கச்ச்சேரி நடைபெற்றது,
இன்று ( மே 9) 8-வது நாள் மண்டகபடியாக கோவில் அருகே பக்தி சொற்பொழிவும், அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே நட்சத்திர கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *