• May 8, 2024

வாகனங்களுக்கு  பவர் பெட்ரோல் நிரப்பும் போட்டி: கோவில் ஊழியருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு 

 வாகனங்களுக்கு  பவர் பெட்ரோல் நிரப்பும் போட்டி: கோவில் ஊழியருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு 

மதுரை மண்டலத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பவர் பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு  பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது.  

அதன்படி கோவில்பட்டி ஞானமலர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பவர் பெட்ரோல் நிரப்பியவர்களுக்கு அதற்கான அதிர்ஷ்ட கூப்பன்களை வழங்கி பவர் பெட்ரோல் பற்றிய ஸ்லோகன் எழுதும் போட்டி நடைபெற்றது.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பவர் பெட்ரோல் நுகர்வோர்களுக்கு தூத்துக்குடியில் வைத்து  அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்தனர். இதில் கோவில்பட்டி ஞான மலர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கூப்பன் பெற்ற ஸ்ரீ செண்பகவல்லியம்மன் திருக்கோவில் ஆன்மீக பணியாளர் துளசிராமன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

 கோவில்பட்டியில் இதற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது பரிசளிப்பு விழாவிற்கு இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளரும், இந்துஸ்தான் துணை பொது மேலாளருமான செல்லப்பிரபு, தூத்துக்குடி விற்பனை அதிகாரி மோகன், கன்னியாகுமரி விற்பனை அதிகாரி டிம் ஜேரியஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துளசிராமனுக்கு ஹோண்டா சைன் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கினர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞான மலர் மைக்கேல் அமலதாஸ் செய்திருந்தார். விழா முடிவில் அமலி அமலதாஸ் நன்றி தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *