விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் போட்டி; தேமுதிக 5 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வுக்கு 5 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா இன்று வெளியிட்டார்.
விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த்-பிரேமலதா தம்பதியரின் மகனான விஜய பிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பி.டெக் பட்டதாரியான இவர் அரசியலில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
மத்திய சென்னை தொகுதி வேட்பாளராக கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) வேட்பாளராக இளைஞர் அணி செயலாளர் கு.நல்லதம்பி, கடலூர் தொகுதி வேட்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து (முன்னாள் எம்.எல்.ஏ) தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிவநேசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.