விஜயகாந்த் உடலுக்கு நிர்மலா சீதாராமன், அரசியல் கட்சியினர் மரியாதை
,மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
காலையில் திரை உலகினர் விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த சமயத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைசசர் ரகுபதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பகலில் மத்திய அரசு சார்பில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , தீவுத்திடல் வந்து விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தியதுடன் பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பிரதமர் மோடியின் இரங்கலையும் தெரிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் நிர்மலா சீதாராமனுடன் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கறுப்பு உடை அணிந்து வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி சென்றார்.
ReplyForward Add reaction |