மூப்பனார் நினைவிடத்தில் என்.ஆர்.தனபாலன் மரியாதை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் ஜி கே மூப்பனார் 22 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், த மா க.தலைவர் ஜி கே வாசன் முன்னிலையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசினார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில தலைமை நிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ,சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் எம்.வைகுண்டராஜா தென் சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் ஆர்.பாலமுருகன்,மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் எம்.என்.சீனிப்பாண்டியன், செயலாளர் ஜோ.ஆன்டனிபீட்டர் ,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம், காஞ்சி மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டியன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் ஏ.சி.தர்மராஜ், விருகை தொகுதி தலைவர் எம்.மணிராஜ், தி.நகர் பகுதி செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.