• May 20, 2024

மின்சார இணைப்புடன் ஆதார் இணைப்பு என்பது சூழ்ச்சியான நடவடிக்கை-வேல்முருகன் எம்.எல்.ஏ.

 மின்சார இணைப்புடன் ஆதார் இணைப்பு என்பது சூழ்ச்சியான நடவடிக்கை-வேல்முருகன் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது,
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
இது மத்திய அரசின் உத்தரவு. அதை தமிழக அரசு சிரமேற்கொண்டு உடனடியாக இணைக்க முயற்சிக்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல. இப்படி இணைப்பதால் அதிக மின்சாரத்தை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் என்று மானியத்தை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முன்னேற்பாடுதான் இது.
மீட்டர் பொருத்தப்படுவதும் இதற்கான முன்னேற்பாடு தான். ஆதாரை இணைப்பது என்பது ஒரு விவசாயி ஒரு மின் இணைப்புக்கு மேல் வைத்திருப்பதை கண்டுபிடித்து அதனை துண்டிப்பதற்கு எடுக்கின்ற சூழ்ச்சியான நடவடிக்கை ஆகும்,
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *