• May 8, 2024

Month: September 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நேற்று 1௦7 மி.மீ.மழை

கோவில்பட்டியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் திடீரென கன மழை கொட்டியது.நகரில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. வாகனனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.நேற்று ஒரு நாளில் மட்டும் கோவில்பட்டியில் 1௦7 மி.மீ.மழை அளவு பதிவாகி இருந்தது. கழுகுமலையில் 17, காடல்குடியில் 16, ஸ்ரீவைகுண்டத்தில் 14.1, ஓட்டப்பிடாரத்தில் 2 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. தூத்துக்குடி […]

செய்திகள்

20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், செப்டம்பர் 1-ந் தேதி (இன்று) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு […]

செய்திகள்

தமிழகத்தில் 4-ம் தேதி வரை கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையும்; நீலகிரி, கோவையில், நாளை முற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருச்சி, பெரம்பலுார், விருதுநகர், மதுரை, துாத்துக்குடி திருவாரூர் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்.இன்று முதல் வரும் 4-ம் […]

கோவில்பட்டி

போலி மதிப்பெண் சான்றிதழ்: அரசு பள்ளி ஆசிரியை பணிநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜாத்தி(வயது 45).கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1994 -1996 ம் ஆண்டு ஆசிரியா் பயிற்சி படித்த இவா் ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண் பெற்றிருந்தாராம். இதனை திருத்தி, 77 மதிப்பெண் பெற்றது போல போலி மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் கொடுத்து 2002ம் ஆண்டு ஆண்டு விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் […]

செய்திகள்

அறநிலைய துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: தி.மு.க.எம்.பி.எதிர்ப்பு

விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து சமய அறநிலையத்துறையின் டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த டுவீட்டை மேற்கோளிட்டு டுவீட் செய்துள்ள தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த […]