• May 17, 2024

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

 ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

கோவில்பட்டி -குமாரபுரம் ரெயில் நிலையங்கள் இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தூத்துக்குடி ரெயில்வே போலீசார் நேரில் சென்றனர்.
அங்கு விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் யார் என்பது பற்றி அடையாளம் காணப்பட்டது. அவரது பெயர் செல்லப்பாண்டி (வயது 57) கொவில்படி இந்திரா நகரர் வடக்கு தெருவை சேர்ந்தவர். அவரது மனைவி காளியம்மாள் (50 ) இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளன
கணவன்-மனைவி இருவரும் மகன் மாரியப்பன் (28) கண்காணிப்பில் வசித்து வந்தனர். செல்லப்பாண்டி கட்டிடங்களில் மொசைக் போடும் தொழில் செய்து வந்துள்ளார். சமீப காலமாக அவர் வேலைக்கு செல்லவில்லை. நேற்று மாலையில் தனது வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இன்று அதிகாலை தனது வீட்டின் அருகில் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்ம பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். சம்பவ இடத்திலிருந்து செல்லப்பாண்டி உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *