• May 16, 2024

தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்

 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரைப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு 22 வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி மற்றும் பங்களா தெரு நண்பர்கள் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள், மற்றும் எழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா கருணாநிதி கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிச்செல்வம், லயன்ஸ் கிளப் அந்தோணி சாமி, 14-வது வார்டு கவுன்சிலர் தவமணி, எம்.டி.ஏ.காளியப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *