கோவில்பட்டியில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு; 675 பேர் பங்கேற்றனர்
கோவில்பட்டி வட்டார நூலகமும் துளிர் ஐ.ஏ.எஸ்.அகாடமியும் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2 A மாதிரி தேர்வு 3 ஞாயிற்றக்கிழமைகளில் நடத்தின.
கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் இந்த தேர்வுளாக நேற்று நடந்த மாதிரி தேர்வை தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகி பார்வையிட்டு டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2, 2A மாதிரித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை பாராட்டிதேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
வட்டார நூலகர் அழகர்சாமி துளிர் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் காளிதாஸ் இதற்கான சிறப்பாக செய்திருந்தனர்.
முதள் நாள் மாதிரித் தேர்வில் 250 மாணவ, மாணவியரும் இரண்டாவது நாள் மாதிரித் தேர்வில் 225 மாணவ, மாணவியர்களும் மூன்றாவது நாள் மாதிரித்தேர்வில் 200 மாணவ, மாணவியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதன் மூலம் மொத்தம் 675 பேர் பங்கேற்று மாதிரி தேர்வு எழுதினார்கள்.