• May 12, 2024

தடுப்பு கம்பியில் கார் மோதி 2 பேர் பலி

 தடுப்பு கம்பியில் கார் மோதி 2 பேர் பலி

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 34) மற்றும் இவரது நண்பர்கள் ஏழுமலை (29), கவியரசு( 3), சுரேஷ் (40), காமராஜ் ( 39), கார்த்தி (29), மற்றும் செல்வகுமார் ( 32) ஆகிய 7 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
பின்னர் அங்கிருந்து நேற்று மாலை சென்னைபுறப்பட்டனர், அவர்கள் சென்ற கார் நள்ளிரவில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏழுமலை உயிரிழந்தார். இதனாள் சாவு எண்ணிக்கை 2 ஆனது,. காயமடைந்த 5 பேரும் தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *