கோவில்பட்டி பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்; அதிகாரிகள் அதிரடி
கோவில்பட்டி நகரில் தனியார் மினி பஸ்கள் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் டிரைவர்கள் , பஸ் நிறுத்தங்கள் தவிர பயணிகள் கை காட்டும் இடங்களில் எல்லாம் பஸ்களை நிறுத்தி ஏற்றி செல்வார்கள். இதன் காரணமாக பஸ்களுக்கு பின்புறம் வரும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவது வழக்கம்.
மேலும் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவார்கள். இது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும், மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தது. இது பற்றி வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் அளிக்கப்பட்டன,
இதன் பேரில், வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினா்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 23 தனியார் பஸ்கள், மினி வசூலிக்கப்பட்டது. மேலும் இனிமேல் ஏர்ஹாரன் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.