வாகன சோதனை-போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணபட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் இந்த சோதனை இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடி அமெரிக்கன் கல்லூரி அருகே வாகன சோதனை மேற்கொண்ட தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை பாலாஜி சரவணன் ஆய்வு செய்த காட்சியை மேலே பார்க்கிறீர்கள்.
இதே போல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கோ.லட்சுமிபதியும் இது போன்ற சோதனைகளை ஆய்வு நடத்தி வருகிறார்,