முழுமையான ஊதியம், பணியிடம் மாறுதல் வேண்டி மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம்
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே மக்கள் நலப்பணியாளர்கள் இன்று காலை முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
மக்கள் நலப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நல்.செல்லப்பாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் இதில் பங்கேற்றனர்,
கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
*1.7.2022 முதல் வாய்மொழி உத்தரவாக பனி நியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு 2006-2011 கலைஞர் அரசின் 6 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1.6.2009 முதல் வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்துடன் பணிவரையறையுடன் –பணி நிரந்தரத்திற்கான அரசாணையை வழங்கிட வேண்டும்.
*9.11.2011 முதல் இறந்துபோன மற்றும் ஒய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ரூ.5 லட்சம் நிவாரண தொகையும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்கிட வேண்டும்.
*வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமே முழுமையான ஊதியம் மற்றும் பணியிடம் மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
*