விஜயகாந்துக்கு கனிமொழி மரியாதை
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்று கனிமொழி எம்.பி., தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் இன்று காலை சென்றார். அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது விஜய்காந்த் மனைவியும் தேமுதிக பொதுசெயலாளருமான பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். அஞ்சலி செலுத்தி முடித்தவுடன் பிரேமலதாவுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.