• May 9, 2024

முடி திருத்தும் தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

 முடி திருத்தும் தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் புளியநகர் சந்திப்பில் முருகன் என்பவரின் முடி திருத்தும் கடையில் முடி வெட்டிவிட்டு, முடி வெட்டியதற்கு பணம்  கொடுக்காமல் சென்ற பொன் சேகர் என்பவரிடம் பணம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. முடி திருத்தும் தொழிலாளி  முருகனிடம் பணத்தை கொடுக்காமல் கெட்ட வார்த்தை பேசிய போன்செகர் ,அருகில் கிடந்த மர பட்டியலால் முருகனின் தலையின் பின்பகுதியில் ஓங்கி  அடித்தார். இதில் முருகனை சம்பவ இடத்டிலேயே இறந்து போனார். இந்த சம்ப்வம் 24.3.2017 அன்று நடந்தது.

இந்த கொலை தொடார்பாக பொன்முருகன் கைதானார், அவர் மீதான  வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்ததுது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம், இன்று 30.1.24 அன்று குற்றம் சட்டப்பட்ட பொன் சேகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *