கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது பற்றி ஆலோசனை
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா. ஜனதா செயற்குழு கூட்டம் ராஜீவ் நகர் இ.பி.காலனி பகுதியில் நடைபெற்றது ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்கள் வசந்த்,சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு விருந்தினராக பார்லிமென்ட் பொறுப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் சக்தி கேந்திர பணிகள் பற்றியும் விரிவாக கிளைத் தலைவர்களுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளருக்கும் எடுத்துரைத்தார். கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மோகன், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி,ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து மற்றும் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்