தேமுதிக தொண்டர்களுடன் பிரேமலதா சந்திப்பு
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, கணவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகம் வந்தார்.
அவரது வருகையை ஒட்டி கட்சி தொண்டர்கள் அதிகமானவர்கள் திரண்டு இருந்தனர். கட்சி அலுவலகத்தில் தேமுதிக கொடியேற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
விஜயகாந்த் விருப்பப்படி கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். நடைபெற இருக்கும் தேர்தலில் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும் என்று பிரேமலதா கேட்டுக்கொண்டார்